என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குறைந்தபட்ச வருமானம்
நீங்கள் தேடியது "குறைந்தபட்ச வருமானம்"
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் நாங்கள் அளிக்கும் குறைந்தபட்ச வருமானத் தொகையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #minimumincometopoor #RahulGandhi
புவனேஸ்வர்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 28-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.
இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
இது வெறும் வாய்ப்பேச்சுதான் நடைமுறைக்கு சாத்தியப்படாது என பா.ஜ.க. முன்னணி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், கலஹன்டி மாவட்டம், பவானிபட்னா பகுதியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, அம்மாநிலத்தை ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ஏழைகள் மற்றும் பழங்குடியினரை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
15 தொழிலதிபர்கள் வாங்கி இருந்த மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு தினந்தோறும் வெறும் 17 ரூபாய் அளிக்கும் திட்டத்தை அறிவித்துவிட்டு, இதை பா.ஜ.க. ஆட்சியின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை திட்டம் என்று அவர் மார்தட்டி வருவதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:-
மத்தியில் ஆளும் மோடி அரசும் இங்குள்ள நவீன் பட்நாயக் அரசும் ஏராளமான நன்மைகளை செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யத் தவறியதுடன் உங்களுடைய விளை நிலங்கள், நீராதாரம் மற்றும் காட்டு வளங்களையும் பறித்துக் கொண்டனர்.
உங்கள் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று மற்றவர்களைப்போல் நான் பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன். ஆனால், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைவரின் வங்கி கணக்குகளிலும் மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் சென்று சேரும் என்பதை நான் மீண்டும் ஒருமுறை இங்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. துணிச்சல் இருந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள். உங்களை நான் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Nopowercanstop #minimumincometopoor #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 28-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.
இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
இது வெறும் வாய்ப்பேச்சுதான் நடைமுறைக்கு சாத்தியப்படாது என பா.ஜ.க. முன்னணி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், கலஹன்டி மாவட்டம், பவானிபட்னா பகுதியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, அம்மாநிலத்தை ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ஏழைகள் மற்றும் பழங்குடியினரை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
15 தொழிலதிபர்கள் வாங்கி இருந்த மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு தினந்தோறும் வெறும் 17 ரூபாய் அளிக்கும் திட்டத்தை அறிவித்துவிட்டு, இதை பா.ஜ.க. ஆட்சியின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை திட்டம் என்று அவர் மார்தட்டி வருவதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ராகுல் காந்தி பேசியதாவது:-
பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் இந்த மாவட்டத்துக்கு முன்னர் முக்கியத்துவம் அளித்து இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினார்கள்.
மத்தியில் ஆளும் மோடி அரசும் இங்குள்ள நவீன் பட்நாயக் அரசும் ஏராளமான நன்மைகளை செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யத் தவறியதுடன் உங்களுடைய விளை நிலங்கள், நீராதாரம் மற்றும் காட்டு வளங்களையும் பறித்துக் கொண்டனர்.
உங்கள் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று மற்றவர்களைப்போல் நான் பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன். ஆனால், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைவரின் வங்கி கணக்குகளிலும் மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் சென்று சேரும் என்பதை நான் மீண்டும் ஒருமுறை இங்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. துணிச்சல் இருந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள். உங்களை நான் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Nopowercanstop #minimumincometopoor #RahulGandhi
இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. #VCK #Thirumavalavan #Rahulgandhi
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற திட்டம் ஏற்கனவே பின்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குடும்பம் ஒன்றுக்கு மாதம் தோறும் ரூ.1,500 வழங்குவதற்கான திட்டம் ஒன்றைத் தயாரித்து அளித்துள்ளார் . இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியம் தான் என்பதற்கு பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியத்தின் அறிக்கையே ஆதாரமாகும்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிமக்கள் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம் என 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தது போல அண்டப்புளுகு அறிவிப்பு அல்ல ராகுல் காந்தியின் அறிவிப்பு. அது நேரு காலம் முதல் ஏழை எளிய மக்களின் பால் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு .
இதுவரை விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தான் பொதுவாக முன்வைக்கப்பட்டு வந்தது. அப்படி கடன் தள்ளுபடி செய்யும் போது அதனால் நிலமற்ற கூலி விவசாயிகள் எந்தப் பயனையும் அடைய முடியவில்லை.
விவசாய வேலை நாட்கள் குறைந்து கொண்டே வருவதால், விவசாயம் செய்யப்படாத காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி வந்தோம்.
இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து இரண்டு முறை கோரிக்கை மனுவும் அளித்திருக்கிறோம். இந்நிலையில் ராகுல் காந்தியின் அறிவிப்பு எங்களது கோரிக்கையை அனைத்து மக்களுக்கும் விரிவு படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #VCK #Thirumavalavan #congress #Rahulgandhi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X